search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜாதி சான்றிதழ்"

    • ஹாதியாவுக்கு ஜாதி, மதம் இல்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
    • அதிகாரிகளுக்கு இவ்வாறு சான்று அளிப்பது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை.

    கோவை:

    கோவை பீளமேடு காந்தி மாநகரை சேர்ந்தவர் பிரலோப். இவரது மனைவி பீனா பிரீத்தி. இவர்களுக்கு 3 வயதில் ஹாதியா என்ற மகள் உள்ளார்.

    இந்த நிலையில் தங்களின் குழந்தைக்கு ஜாதி, மதம் இல்லை என்று குறிப்பிடும் வகையில் சான்றிதழ் வாங்க வேண்டும் என அவர்களது பெற்றோர் முடிவு செய்தனர்.

    இதற்காக அவர்கள் கோவை வடக்கு தாசில்தார் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தனர்.

    விண்ணப்பங்களை பரிசீலித்த அதிகாரிகள் நேற்று பிரலோப்-பிரீத்தி தம்பதியின் குழந்தை ஹாதியாவுக்கு ஜாதி, மதம் இல்லையென்ற சான்றிதழ் வழங்கினர். அதில் ஹாதியாவுக்கு ஜாதி, மதம் இல்லை என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

    எல்லோரும் இந்தியர்கள் என்ற மனநிலை மட்டும் இருந்தால் போதும். எங்கள் மகளை ஜாதி,மதம் என எதை வைத்தும் பிரிக்க வேண்டாம் என முடிவு செய்தோம்.

    இவ்வாறு சான்று பெறுவதால் வருங்காலத்தில் ஜாதி ரீதியான இடஒதுக்கீடு உள்ளிட்ட எந்த சலுகையும் எங்கள் குழந்தை பெற இயலாது என்று தெரிந்து தான் விண்ணப்பித்தோம்.

    சான்று பெற விண்ணப்பித்து, அதனை பெறுவதில், சிறிது காலதாமதம் ஏற்பட்டது. ஏன் இதை வாங்குகிறீர்கள் என நிறைய கேள்விகள் கேட்டனர். அதிகாரிகளுக்கு இவ்வாறு சான்று அளிப்பது குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. தமிழக அரசு ஏற்கெனவே பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்கும்போது பெற்றோர் விருப்பப்பட்டால், மாற்று சான்றிதழில் ஜாதி, மதமில்லை என்று குறிப்பிடலாம். அல்லது அந்த கேள்விக்கான இடத்தை அப்படியே விட்டு விடலாம் என்று அரசாணை வெளியிட்டு உள்ளது. இது எத்தனை பேருக்கு தெரியும் என்று தெரியவில்லை.

    எங்களை போல பலரும் தங்களின் குழந்தைகளுக்கு ஜாதி, மதம் இல்லாத சான்றிதழ் பெற விரும்புகின்றனர். ஆனால் இதற்காக எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றிய விவரம் அவர்களுக்கு முழுமையாக தெரியவில்லை. எனவே அரசாங்கம் இதுகுறித்து பொது மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாவாடை மகள் நிஷா மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் மனு ஒன்றை அளித்தார்.
    • 3முறைவிண்ணப்பித்தும் எனக்கு ஜாதி சான்றிதழ் அளிக்காமல் நிராகரித்து, எங்களை எங்களை அலைக்கழிக்கின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகே ஆசனூர் கிராமத்தைச் சேர்ந்த பாவாடை மகள் நிஷா மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில் கூறியுள்ளதாவது:-

    எனது அம்மா ஆசனூர் கிராமத்தை சேர்ந்தவர். எனது தந்தை கள்ளக்குறிச்சி அருகே உள்ள விளம்பாவூர் கிராமத்தைச் சேர்ந்தவர். எனது தந்தை, தாய் 2 பேரும் நான் கருவில் இருக்கும்போது பிரிந்து விட்டதால், எனது தாயார் ஆசனூர் கிராமத்திற்கே வந்து விட்டார். நாங்கள் மலைக்குறவன் சமுதாயத்தை சார்ந்தவர்கள். எங்களின் தொழில் பன்றி வளர்ப்பு மற்றும் கூடை பின்னுதல், வேட்டை ஆடுதல் ஆகும்.  தற்போது நான் ஜாதி சான்றிதழ் வேண்டி ஆன்லைனில் விண்ணப்பிக்க, தந்தையின் ஜாதி சான்றிதழ் அளிக்குமாறு தெரிவிக்கிறார்கள். எனது தந்தை பள்ளிக்கு சென்றதில்லை. அவரிடம் எந்த ஆவணமும் இல்லை.

    எனது தந்தையின் உடன் பிறந்த தம்பி பழனிவேல் என்பவரின் மகன் அனிஷ் ஜாதி சான்றிதழ் உள்ளது. அதனை வைத்து 3 முறை விண்ணப்பித்தும் எனக்கு ஜாதி சான்றிதழ் அளிக்காமல் நிராகரித்து, எங்களை அலைக்கழிக்கின்றனர். இதனால் பள்ளி படிப்பை தொடர்வதிலும், கல்லூரி படிப்பை படிக்க முடியாமல் போகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. தாங்கள் தயவுகூர்ந்து இதன் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, உடனே எனக்கு ஜாதி சான்றிதழ் வழங்கி பிளஸ் -1 படிப்பினை தொடர வழிவகை செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. கூடுதலாக குறிப்பு என எழுதி தங்களிடம் மனு அளிப்பது இது 3-வது முறை என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேபோல் இவரது அண்ணன் ஈஸ்வரர் தனது கல்லூரி படிப்பை தொடர ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்க வேணடும் என மற்றொரு மனுவை கலெக்டரிடம் வழங்கினார். இந்த மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    • கடலூரில் இருந்து புறப்பட்டு நடை பயணமாக வருகிற 21 -ந் தேதி சென்னை கோட்டைக்கு செல்வதாக அறிவித்திருந்தனர்.
    • போலீசார் நடைப்பயணம் செல்வதற்கு தயாரான நிலையில் இருந்தவர்களை கைது செய்தனர்.

    கடலூர்:

    பழங்குடி இருளர் பாதுகாப்பு சங்கம் சார்பில் பழங்குடி, இருளர் உள்ளிட்ட அனைத்து நலிந்த பிரிவினருக்கும் விரைவில் ஜாதி சான்றிதழ், மனைப்பட்டா, நல வாரிய அட்டை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும். சாதி சான்றிதழுக்கு இணையவழி அல்லாமல் நேரடியாக மனு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (புதன்கிழமை) கடலூரில் இருந்து புறப்பட்டு நடை பயணமாக வருகிற 21 -ந் தேதி சென்னை கோட்டைக்கு செல்வதாக அறிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து நேற்று வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு தலைமையில் அதன் ஒருங்கிணைப்பாளர் பாபு, தலைவர் சிவகாமி மற்றும் நிர்வாகிகளிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த சமாதான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இதனை தொடர்ந்து இன்று திட்டமிட்டபடி சென்னைக்கு நடை பயணமாக செல்வோம் என அறிவித்திருந்தனர்.

    அதன்படி இன்று காலை மாநில ஒருங்கிணைப்பாளர் கல்யாணி தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாபு, சட்ட ஆலோசகர் வக்கீல் திருமேனி, தலைவர் சிவகாமி உள்ளிட்ட ஏராளமானோர் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகே திரண்டனர். பின்னர் நடைபயணமாக செல்வதற்கு தயாரானார்கள். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று ஒரு பெண் மயக்கம் அடைந்து சாலையில் விழுந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு இருந்தவர்கள் உடனடியாக அந்த பெண்ணை மீட்டு குடிநீர் வழங்கினர். பின்னர் சிறிது நேரத்தில் அந்த பெண்ணுக்கு பாதிப்பு இல்லை என தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் நடைப்பயணம் செல்வதற்கு தயாரான நிலையில் இருந்தவர்களை கைது செய்தனர். இதில் 30 பெண்கள் உட்பட 74 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களை தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதன் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • நரிக்குறவ மாணவ- மாணவிகளுக்கு சாதிச் சான்றிதழ்களை பூந்தமல்லி நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், பூந்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் ஆகியோர் வழங்கினர்.
    • தனியார் கல்லூரி பங்களிப்புடன் புத்தகப்பை, நோட்டு, புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    பூந்தமல்லி:

    பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட அம்மான் நகர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட நரிக்குறவ இன குடும்பங்கள் வசித்து வருகின்றன. அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் வசித்து வரும் இவர்களின் குழந்தைகள் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து வருகின்றனர்.

    கோடை விடுமுறைக்கு பின் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் நரிக்குறவர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதற்காக சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்திருந்தனர்.

    இதையடுத்து பூந்தமல்லி அம்மான் நகர் பகுதியில் நரிக்குறவ மாணவ- மாணவிகளுக்கு கல்வி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் நரிக்குறவ மாணவ- மாணவிகளுக்கு சாதிச் சான்றிதழ்களை பூந்தமல்லி நகர்மன்ற தலைவர் காஞ்சனா சுதாகர், பூந்தமல்லி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன் ஆகியோர் வழங்கினர். மேலும் தனியார் கல்லூரி பங்களிப்புடன் புத்தகப்பை, நோட்டு, புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் காஞ்சனா சுதாகர் பேசும்போது, நரிக்குறவர்களுக்கு தி.மு.க. ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்தும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவடியில் நரிக்குறவ மாணவிகள் வீட்டுக்கு சென்று உணவு அருந்தியது குறித்தும் பேசினார்.

    இன்ஸ்பெக்டர் சிதம்பர முருகேசன், வழக்கறிஞர் மாலினி ஆகியோர் நரிக்குறவ இன மாணவ மாணவிகளுக்கு கல்வியின் அவசியத்தையும், முக்கியத்துவத்தையும், கல்வியினால் ஏற்படும் மாற்றத்தையும், வளர்ச்சியையும் எடுத்துக் கூறி தொடர்ந்து பள்ளிக்கு செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினர். கல்லூரி மாணவ - மாணவியர் மற்றும் நரிக்குறவ மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    நகர்மன்ற துணைத் தலைவர் ஸ்ரீதர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

    தனது மகள்களை பள்ளியில் சேர்க்கும் போது ஜாதியை குறிப்பிடவில்லை என கமல்ஹாசன் ட்வீட் செய்திருந்தற்கு, அவரது மகள் ஸ்ருதியின் பழைய பேட்டி ஒன்றை முன்வைத்து நெட்டிசன்கள் கமலை விமர்சித்து வருகின்றனர். #KamalHaasan #ShrutiHaasan
    சென்னை:

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் சமீபத்தில் ட்விட்டரில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்களின் கேள்விக்கு பதிலளித்து ட்வீட் செய்தார். சாதியை ஒழிக்க என்ன யோசனையை முன்னெடுக்கின்றீர்கள்? என ஒருவர் கேட்டிருந்தார்.

    அதற்கு பதிலளித்து ட்வீட் செய்த அவர், “எனது இரு மகள்களையும் பள்ளியில் சேர்க்கும் போது அவர்களுக்கான விண்ணப்பத்தில் ஜாதியை குறிப்பிட மறுத்தேன். அடுத்த தலைமுறைக்கு ஜாதியை எடுத்துச் செல்லாமல் தவிர்க்க இதுவே வழி. அனைவரும் இதனை பின்பற்ற வேண்டும்” என தெரிவித்திருந்தார்.



    இந்நிலையில், கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஸ்ருதிஹாசன் சில ஆண்டுகளுக்கு முன் அளித்த பேட்டி ஒன்றில், தன்னுடைய ஜாதியை குறிப்பிட்டு, நான் அந்த ஜாதியை சேர்ந்தவள் என பேசியிருப்பார். இந்த வீடியோவை பதிவிட்டு பலர் கமல்ஹாசனை கிண்டல் செய்து விமர்சித்து வருகின்றனர்.

    ‘பள்ளி விண்ணப்பத்தில் ஜாதியை குறிப்பிட மறுப்பது ஜாதியை ஒழிக்காது. ஜாதியை தெரியாமல் குழந்தைகளை வளர்க்க வேண்டும்’ என பலர் குறிப்பிட்டுள்ளனர். மேலும், தனது ஜாதியை பெருமையாக உங்களது மகள் குறிப்பிடுகிறார். இது எப்படி ஜாதியை ஒழிக்கும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    உங்களை மிகவும் பாதித்த நூல் எது? என்ற கேள்விக்கு கமல்ஹாசன் ‘பூணூல்’ என பதிலளித்திருந்தார். இந்த பதிலும் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 
    ×